தமிழ் மொழி தனித்துவமானது . இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு சொல்லுக்கு பல பொருண்மைகள் உண்டு. ஒரு பொருளுக்கு பல சொற்களும் உண்டு. இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது என்றாலும் தமிழ் மொழியின் தனித்துவம் மேலானது . மெய்ஓட்டுக்களை அல்லது எச்சங்களைச் சேர்த்து ஒரே சொற்றொடர் இருவேறு பொருளுரைக்கும் தன்மையை நுட்பமாக தவிர்த்துக் கொள்கின்றார்கள்.எ.கா "தங்க வீடு வேண்டும்" என்று ஒருவர் சொன்னாலே அது தங்கத்தாலான வீட்டையும் குறிக்கும் , குடியிருப்பதற்கு தேடும் வீடாகவும் இருக்கும் . பொதுவாக ம் உடன் முடியும் பெயர்ச்சொற்கள் பெயரடையாக மாறும் போது இந்த ம் நீக்கமுறும் . தங்கத்தாலான வீடு -> தங்கம் வீடு -> தங்க வீடு
தங்குவதற்கான வீடு -> தங்க வீடு .
தகரம் -- > தகர வீடு
பிளாட்டினம் --->பிளாட்டின வீடு
ஈயம் ---> ஈய வீடு
கற்பூரம் ---> கற்பூர வீடு
செங்கல்---> செங்க வீடு
ஆனால் பெயர்ச் சொல் உயிர் மெய் எழுத்துக்களுடன் முடிந்திருந்தால் பெயர்ச் சொல்லே பெயரடைச் சொல்லாக மாற்றமின்றி பயன்படுத்தப் படுகின்றது பித்தளை---> பித்தளை வீடு, இரும்பு ---> இரும்பு வீடு , வெள்ளி ---> வெள்ளி வீடு
தங்கத்தாலான வீடு என்பதே காலப்போக்கில் தங்க வீடு என்று குறுக்கமுற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்
" வேலை கேட்டான்" செய்வதற்கு வேலை கேட்டான் என்றும் , வேலைக்(Arrow) கேட்டான் என்றும் பொருள்படும் முன்னதில் மெய்யொற்று தவிர்க்கப் படுவதாலும் பின்னதில் மெய்யொற்று இணைவதாலும் சொற்றொடரின் பொருள் நுட்ப்பமாய் வேறுபடுத்தப்படுகின்றன