Wednesday, September 28, 2011

Valarum Ariviyal Tamil

டு விற்கு முன் டகர மெய்  வந்தால் ,அத்தகைய பெயர்ச்சொற்கள் 
பெயரடையாகவும் இருக்கும். எ.கா 
பட்டுச்சீலை ,
வேட்டுச்சத்தம் ,
சிட்டுக் குருவி ,
ஒட்டுத் துணி ,
கட்டு  மரம், 
கொட்டு மேளம், 
சொட்டு மருந்து .
 
ஆனால் அத்தகைய சொற்கள் பிற வினைச் சொல்லானால்
வினையடையாக மாறும் போது இது போன்ற 
சொல்லொ ழுங்கு காணப்படுகிறது .
 
எட்டு - எட்டி உதை
முட்டு - முட்டிக்கொள் 
தட்டு - தட்டிக் கேள்
காட்டு - காட்டிச் சொல் 
வாட்டு - வாட்டி எடு 
 
டு விகுதி சேர்க்கப்பட்டு பிற வினைச் சொற்களாக்கபட்ட 
சொற்களுக்கும் இது பொருந்தும்.
 
துவள் -துவட்டு - துவட்டிக் கொள் - துவண்டு 
மிரள் - மிரண்டு - மிரட்டிக் கேள் -மிரண்டு
உருள் - உருட்டு - உருட்டிச் செல் - உருண்டு 
 மீள் - மீட்டித் தா - மீண்டு
 
இது போன்ற கிளைச் சொல்லாக்கங்களில் 
உகர ஈறு இகரமாயிருப்பதைப் பார்க்க முடிகிறது.
'டு ' உடன் முடியும் ஈரெழுத்து வினையடிகள்
 பெயர்ச்சொல்லாக மாறும் போது ஒரு குறிப்பிட்ட 
நெறி முறை பின்பற்றப்படுகிறது.
 
வினன்     பெயர்       எச்சம்(பொது)          பெயரெச்சம் 
ஆடு        ஆட்டம்      ஆட்டநாயகன்         ஆடிய ஆட்டம் 
ஓடு         ஓட்டம்       ஓட்டப் பந்தையம்     ஓடிய    ஓட்டம் 
கூடு         கூட்டம்      கூட்ட நெரிச்சல்       கூடிய   கூட்டம் 
கோடு      கோட்டம்    கோட்ட வாயில்
நாடு         நாட்டம்       நாட்டமின்மை          நாடிய உதவி 
வாடு       வாட்டம்      வாட்டமில்லை         வாடிய பயிர் 
மூடு        மூட்டம்       மூடுபனி                    மூடிய கதவு
பாடு        பாட்டம்       பாடுங்கூட்டம்           பாடிய குரல்
 
வினையடியுடன் 'அம்' என்ற விகுதிச் சேர்க்கையால் வருவன
பெயர்ச் சொற்களாகும் .'டு ' உடன் 'அம்' சேர 'ட்டம்' 
தோன்றுகிறது .
 
டு + அம் = ட்டம்
 
உகரம் நீங்கி மெய் இரட்டித்து அகரத்துடன் இணைவதால் 
ஏற்படும் சொற்கள் தமிழ் மொழியில் பலவுண்டு .
'டு' உடன் முடியும் ஈரெழுத்துப் பிற வினையடிகளில் முதலெழுத்து பெரும்பாலும் 
நெடில் அல்லது நெடில் சார்ந்த மெய்களாக இருப்பதைப்
 பார்க்க முடிகிறது. இவ்விதிக்கு உடம்படாத 
வினையடிகளும் உள்ளன .போடு என்ற
வினையடியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .
 
'அம் ' விகுதிச் சேர்கையால் பெறப்பட்ட
 சொற்கள் மகர மெய்யீற்றைக் கொண்டிருப்பதால் ,
மகரத்தை நீக்கி பெயரடைச் 
சொற்களை உருவாக்கிக் கொள்ளுதல் எளிது .
நோட்டம் என்ற சொல் வழக்காற்றில் உள்ளது .இதன் வினையடி 
நோடு என்றிருந்தால் 'அம்' விகுதிச் சேர்க்கை 
அச்சொல்லைத் தந்திருக்கமுடியும் . ஆனால் நோடு
என்ற வினைச் சொல் வழக்காற்றில் இல்லை. மூன்றாம் 
வேற்றுமை உருபுகள் ஒன்றான ஓடு ,என் ,உன் ,கண் ,மண் 
போன்ற சொற்களோடு சேரும் போது என்னோடு ,உன்னோடு ,
கண்ணோடு ,மண்ணோடு போன்ற கூட்டுச் சொற்களைத் தரும். 
இவற்றைப் பிரித்தறிவதில் குழப்பம் மேலிடலாம் 
என்பதால் நோடு என்ற வினைச் சொல் 
தவிர்க்கப்பட்டிருக்கலாம் .
மூடு, பாடு போன்ற வினையடிகளிலிருந்து பெயரடைச் சொற்களை வருவிக்கும் போது சில அமைவுகளில் விதி 
விலக்கு காணப்படுகிறது. மேக மூட்டம் ,ஆட்டம் பாட்டம்  என்று பெயரடைச் சொல்லாக வரும் மூட்டமும் ,
பாட்டமும் ,பெயரடைச் சொல்லாக வரும் போது மூடு ,பாடு
என்றே வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டலாம் .
 
'டு ' உடன் முடியும் மூவெழுத்து பெயரடி 
அல்லது வினயடிகளின் இடையில் டகர ஒற்று இருப்பின் ,மெய்
இரட்டித்தல் தேவையில்லாது போக ,இது போலப்
 பிற மாற்றங்களைப் பெறுகிறது .
 
ஊட்டு - ஊட்டம்
கட்டு - கட்டம் 
கொட்டு - கொட்டம்
 
பட்டு என்றால் உல்லாசம் என்றும் பொருள்படும் . எனவே 
உல்லாசம் தரும் விளையாட்டு பட்டமானது போலும்.
இதிலும் ஒரு சில விதி விலக்குகள் காணப்படுகின்றன.
 
தீட்டு - திட்டம் 
 
இம்மாற்றத்தில் ஆதி குறுகல் ஏற்பட்டிருக்கின்றது . ஆதி குறுகலும் ஆதி நீட்டலும் புணர்ச்சி வழிமுறைகளில் ஏற்றுக் 
கொள்ளப்பட்டிருகின்றன .    
     

Thursday, September 22, 2011

Valarum Ariviyal Tamil

மதராஸ் என்றிருந்த நம் மாநிலத்தின் பெயர் சேர நாடு, சோழ நாடு, 
பாண்டிய நாடு போலத் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது 
அந்தச் சொல்லைப் பெயரடையாகப்  பயன்படுத்தும்போது தமிழ்நாடு என்றே தமிழ் மரபிற்கு விதி விலக்க்காகப்
பயன் படுத்தப் பட்டது . தமிழ்நாட்டு அரசு ,தமிழ் நாட்டு 
மின்வாரியம் ,தமிழ்நாட்டு வீட்டு வாரியம் என்று மரபை ஓட்டிப் 
பயன்படுத்தாமல் தமிழ்நாடு அரசு ,தமிழ்நாடு மின்வாரியம், 
தமிழ்நாடு  வீட்டுவாரியம்என்றே வழங்கப்பட்டது 
.பைந்தமிழ் சொற்களிலும் இது போன்ற விதி விளக்கு காணப்படுகிறது.
 ஏடகம் (ஏடு + அகம் ),ஊடகம் (ஊடு + அகம் ) போன்ற சொக்களில் ,மரபு வழி மாற்றம் ஏதுமின்றிப் பெயரடையாகப் 
பயன்படுதப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இலக்கண மரபை 
விடக் குறிக்கப்படும் பொருளுக்கு முக்கியத்துவம் 
கொடுக்கப்பட்டே மொழி வளர்ந்திருக்கிறது என்பதை 
இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. "டு" என்ற எழுத்தோடு 
முடியும் பெயர்ச் சொற்கள் பொதுவாக மாற்றமின்றி 
பெயரணைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதில்லை .
பெயர் உரிச் சொல்லாக்கப்ப்படும்போது ,அதில் ஒரு 
சொல்லொழுங்கு காணப்படுகிறது. அவ்வொழுங்கு 
விகாரப்புணர்சியிலும்  வெளிபடுகின்றது .
பெயர்ச்சொல்        பெயரடை           கூட்டுச்சொல் 
ஏடு                            ஏட்டு                   ஏட்டுச்சுவடி 
நாடு                          நாட்டு                  நாட்டுப்பற்று 
வினையடையாக வினைச் சொற்க்களோடு சேரும் போதும் 
இதுபோன்றதொரு சொல்லொழுங்கு காணப்படுகிறது 
.
வினைச்சொல்        வினையடை       கூட்டுச்சொல்
சுடு                             சுட்டு                    சுட்டுவீழ்த்து 
தொடு                        தொட்டு               தொட்டுப்பேசு
வினையிலிருந்து பெயரடைச் சொற்கள் உருவாக்கப்படுவது
முண்டு 
வினைச்சொல்     பெயரடை          கூட்டுச்சொல்
சாடு                       சாட்டு                 சா ட்டுங்குற்றம் 
திருடு                    திருட்டு              திருட்டுப் பொருள் 
பெயர்ச் சொல்லிலிருந்து வினையடைச் சொற்கள் உருவாக்கப்படுவதுமுண்டு .இது இரண்டாம் வேற்றுமை 
உறுப்புச் சேர்க்கையினால் ஏற்படுவதாகும்.
பெயர்ச்சொல்       வினையடை          கூட்டுச்சொல்
சூடு                        சூட்டை                   சூட்டைத்தணி
கோடு                    கோட்டை               கோட்டைத் தொடு
மரபுகள் பொருளை வேறுபடுத்துமாறு அமைந்தால் விதி 
விலக்குகளை ஏற்படுத்தக்  கொண்டு பொருள் திரிவு படாமல் 
சொல்லில் விகாரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியது 
அவசியமாகிறது .
மூடு - மூடுவிழா 
ஈடு - ஈடு  பெண்
ஊடு - ஊடுபரவல்
மூட்டு விழா ,ஈட்டுப்பெண்  ஊட்டுப்பரவல் போன்ற கூட்டுச்
சொற்கள் கூடும் சொற்களின் பொருளை முற்றும்
வேறுபடுத்துவதால் அத்தகைய கூட்டுச் சொற்கள் 
பயபடுத்த்ப்படுவதில்லை . 
  
  

Valarum Ariviyal Tamil

சொல்லாக்கங்களில் சொல்லமைப்புக்கள்
 
மரபு வழிச் சொல்லாக்கங்கள்
 
கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் உண்மையில் சொல்லாக்க நெறிமுறைகளோடு
தொடர்புடையன .சொல்லாக்க நெறிமுறைகள் பல ஏற்கனவே மொழியில் 
பின்பற்றப் பட்டு  உருவான சொற்களையே நாம் இன்றைக்கும் வழக்காற்றில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் .பொதுவான ,பழமையான அந்த நெறிமுறைகளை
கலைச்  சொல்லாக்க வலி முறைகளில் பின்பற்றினால், தரமான கலைச் சொற்களை எளிதாக
உருவாக்க முடிகிறது. அச் சொற்கள் அதனோடு பொருள் தொடர்புடைய 
கிளைச் சொற்களை உருவாக்க இடம் கொடுப்பதால் விரிவாக்கங்களுக்கும்  ஏற்புடையதாக
 இருக்கின்றன. கிளைச்சொற்களை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை 
பொதுவாகத் தமிழ் மரபை ஒட்டி எழாத சொற்களுக்கே ஏற்படுகின்றன. அப்போது ,அச் சொல்லை 
நீக்கிவிட்டு வேறு சொல்லைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயம் 
ஏற்படுகின்றது. 
 
எடுத்துக்காட்டாக Library  என்ற சொல்லை நூல் நிலையம் என்று மொழி   யாக்கம்  செய்தார்கள். ரயில் நிலையம், பேருந்து நிலையம், அழகு நிலையம், விமான நிலையம் 
சிகை அலங்கார நிலையம்  போன்ற கூட்டுச் சொர்க்களைப் போல நூல் நிலையமும் பெரு 
வழக்கில் நிலை பெற்றது. ஆனால் Librarian ,Library  Science ,circulation  library reference
library  ஆகிய சொற்களுக்கு இணையான தமிச் சொற்களை நூல் நிலையம் என்ற அடிப்படைச்
சொல்லிலிருந்து உண்டாக்குவது சற்று கடினம். எனவே
இப்போது இச் சொல் நூலகம் என்று தரப்படுத்தப் பட்டுள்ளது .இக் சொல் நூலகர் ,நூலகவியல் ,சுழல் நூலகம் ,தகவல் நூலகம் போன்ற கிளைச் சொற்களை எளிதாக உருவாகிக் கொடுத்திருக்கிறது.
 
அகம் என்ற சொல் விகுதிச் சேர்க்கையாகப் பயன் படுத்தப் படுவது சொல்லாக்க வழி முறைகளில் மேற்கொள்ளப் பட்டிருகிறது. .அகம் என்ற சொல்லிற்கு வீடு, மனம் ,
ஞானம் ,உள் எனப் பொருள் பல வுண்டு .இது பல பொருளில் அகம் என்ற சொல் ,
சொல்லொட்டுகளில் பயன் படுத்த முடியும் என்பதைத் தெரிவிக்கிறது. விகுதிச் சேர்க்கையாகப் 
பயன் படுத்தும் போது மகர ஈறு மங்குவதில்லை .எ.கா . நூலகம் ,உணவகம் ,தேநீரகம் ,முடி திருத்தகம் ,மருந்தகம் ,பெட்டகம் ,காப்பகம் ,ஆய்வகம் ,
போன்ற சொற்களைக் காட்டலாம் .இங்கு அகம் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது 
பெயரடியாக ப் பயன் படுத்தும் போது மகர ஈறு நீங்கப் பெற்று ,பெயரடைச் சொல்லாகப் 
பயன் படுத்தப் படுகிறது.
எ. கா. அகநானுறு ,அகத்திணை ,அக நிலை .
இதற்கு விதி விலக்காக அமைந்துள்ள சொற்களும் வழக்காற்றில்  உள்ளன. அகம் தன மகர ஈற்றை 
இழக்காமல் ,சொல்லொட்டுகளில் பெயரடையாகச் சேருவதும் உண்டு .
எ. கா. 
அகம்படி 
அகம்பாவம் 
 
அகப்படி ,அகப்பாவம் என்ற சொற்கள் சரியான பொருளுரைக்காததால் வல்லின மெய்யொற்று  
இடைத் தோன்றல் தவிக்கப்பட்டு இயல்பாய் வந்த மகர ஒற்றே நிலைப்பட்டது. .
 
அகம் கலைச் சொல்லாக்கங்களில் பயன்படுத்தப் படுகிறது . 
infrared - அகச் சிவப்பு 
infra  sound - அக வொலி
green  house  effect  - பசுமையக விளைவு 
 
ரயில்,பேருந்து ,விமானம் போன்ற போக்குவரத்து ஊர்திகள் வந்து போகுமிடங்களுக்கும் ,தொலைகாட்சி 
வானொலி போன்ற ஒளி மற்றும் ஒலி பரப்புமிடங்களுக்கும் 
நிலையம் என்ற சொலொட்டே ஏற்றுக் கொள்ளப் பட்டது .பொதுவாக உகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் மெய்யீற்றுப் பெர்யர்ச் சொற்கள் போன்றவை . அகம் என்ற சொல்லை 
பின்னொட்டாக  ஏற்கின்றன. பிரிப்பகம் ,நினைவகம் , இனிப்பகம், படிப்பகம் ,பதிப்பகம் போன்ற
சொற்கள் உகர ஈற்றுப் பெர்யர்ச் சொற்களிலிருந்து தோன்றியவை. எழிலகம் ,
தூதரகம் ,அலுவலகம் போன்றவை மெய்யீற்றுப் பெயர்ச் சொற்களிலிருந்து தோன்றியவை. .இந்த வழி முறையை சொல்லாக நெறி முறைகளில் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்கலாம்      .