Wednesday, November 2, 2011

valarum ariviyal thamil

வு -பின்னொட்டு விகுதி 
பொதுவாக 'வு' என்ற எழுத்து பின்னொட்டு விகுதியாகத் தன வினையடிகளுடன் மட்டும் சேர்க்கிறது. இச் சேர்க்கையில் 
ஒரு சொல்லொ ழுங்கு இயல்பாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது .'வு' என்ற எழுத்தை ஈறாகக் கொண்டுள்ள 
ஈரெழுத்துச் சொற்களை நுணுகி ஆராயும் போது அச் சொற்களின் முதலெழுத்து உயிர் நெடில் அல்லது உயிர் நெடிலுடன் 
கூடிய மெய் எழுத்தாக இருக்கின்றன .
ஈரெழுத்துச் சொற்களில் வு - பின்னொட்டு விகுதி 
நெடில் -
 ஈவு ,ஏவு
நெடில்-மெய் - 
ஆ - காவு,சாவு ,தாவு ,பாவு,மாவு 
ஈ -சீவு,தீவு ,நீவு 
ஊ -கூவு,தூவு 
ஏ- மேவு 
ஓ-நோவு
ஓள- வௌவு

'வு' விகுதிச் சேர்க்கைக்கு இணங்கும் வினையடி ஈரெழுத்து டையதெனில்,வினையடியின் ஈற்றெழுத்து இடையின 
மெய்யாகவோ அல்லது உயிர் குறிலுடன் இணைந்த
 உயிர்மெய்யாகவோ  மட்டும் இருக்கிறது .
எ.கா. இடையின மெய் ஈற்றுடன் 
ய்- ஆய்வு,உய்வு ,ஓய்வு,சாய்வு,தேய்வு ,பாய்வு 
ர்- ஆர்வு,சார்வு,சோர்வு,தீர்வு,தேர்வு,வேர்வு,
ழ்- ஆழ்வு,தாழ்வு ,வாழ்வு 

இடையின மெய்களுள் குறிப்பாக ய், ர் ,ழ் மட்டுமே அதிகமாக உள்ளன.ல், ள் வழக்கில் இல்லை. வினையடிகளின் 
முதலெழுத்து நெடில் அல்லது நெடில் சார்ந்த மெய்யாக இருக்கிறது. வுகரச் சாரியை ஈறாக வகர ஒற்று இடைவரத் தமிழ் மொழியில் பல சொற்கள் உள்ளன. எ.கா. எவ்வு ,கவ்வு ,சவ்வு,தவ்வு,வவ்வு. இங்கு வினையடிகளின் 'வு'விகுதிச் சேர்க்கை மேற்கொள்ளப் படவில்லை. இவை தனிச் சொற்கள் மட்டுமில்லை.வு ஈற்றாய் உள்ள வினைச் சொற்களுமாகும்.முன்னதில் 'வு' விகுதிச் சேர்க்கை வினையடிகளைப் பெயர்ச் சொல்லாக்கு கின்றது .'வு'ஈற்றாய் 
உள்ள ஈரெழுத்து வினைச் சொற்களில் முதலெழுத்து குறில் அல்லது குறில் சார்ந்த மெய்யாக இருக்கிறது .
வு ஈற்று குறில் மெய் இடைவரும் மூவெழுத்துச் சொற்கள் 
வல்லினம் 
அ- மகவு,நெசவு,தடவு,கதவு,துறவு 
இ -நசிவு,முடிவு,முறிவு 
ஐ- அசைவு,அடைவு,சிதைவு,மறைவு.
மெல்லினம் 
அ -உணவு,கனவு
இ - துணிவு,கனிவு
ஐ- இணைவு,அமைவு 
இடையினம்
அ -உயவு,இரவு,செலவு,உவவு ,முழவு,அளவு 
இ -சரிவு,மலிவு,அழிவு,தெளிவு 
உ -மருவு ,கெழுவு , கொளுவு 
ஐ - விரைவு ,அலைவு,குழைவு,விளைவு .
'வு'உடன் முற்றுப் பெரும் மூவெழுத்துச் சொற்களில் இடையெழுத்துகள் தமிழ் மொழியில் உள்ள தனிச் 
சொற்களைப் போல அகர,இகர ,உகர ஐகார மெய்யீற்றுக் கொண்டுள்ளன .முதலெழுத்து குறிலாகவோ 
அல்லது குறில் சார்ந்த மெய்யாகவோ இருக்கிறது. 
'வு' உடன் முற்றுப் பெறும் மூவெழுத்து வினையடிகள் பெரும்பாலும் இடையின மெய்யுடன் குறிப்பாக ய்,ர்,ழ் 
இவற்றுடன் முடிவடைந்திருக்கின்றன.
எ.கா.
ய் உடன் : உராய்வு 
ர் உடன் : அமர்வு,ஒளிர்வு ,முதிர்வு 
ழ் உடன் : உறழ்வு ,மகிழ்வு ,நிகழ்வு ,நெகிழ்வு .மூவெழுத்துத் தன் வினையடிகளின் இடை யெழுத்து குறில் மெய்யாக இருக்கின்றது.இதில் இடையினம் 
காணப்படவில்லை. குறில் இடையினச் சேர்க்கையால் 'வு' விகுதிச் சேர்க்கைத் தவிர்க்கப்படுகிறது .
எ.கா. வளர்வு,துயர்வு,புரள்வு போன்ற சொற்கள் பெரு வழக்காற்றில் இல்லை .

பொதுவாக 'வு' ஈற்றுப் பெயர்ச் சொற்கள் மாற்றம் ஏதுமின்றி வினையடையாக இருக்கின்றன. எனினும் பின்வரும் 
வினைச் சொற்களின் முதலெழுத்திற்கு ஏற்ப புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கிறது .
எ.கா.     வு + அ = வ 
                வு + இ = வி
                வு + உ = அ 
                வு + ஐ = வை 

பெயர்ச் சொல் வினையடையாக இருப்பதைப் போல வினைச் சொல்லையே பெயரடையாகக் கையாள்வதும் 
உண்டு. வினைச் சொல்லையும் ,பெயர்ச் சொல்லையும் சேர்த்து உண்டாக்கும் இவற்றை வினைத் தொகை 
என்பர்..'வு' ஈற்று பெயர்ச் சொற்களின் வினையடி இதற்கு இணக்கமாகின்றது 
அறிதிறன் - intelligence
உராய் தளம் - Frictional surface
உணர் கருவி - Detector
கலைச் சொல்லாக வழிமுறைகளில் இந்நெறி முறை மிகவும் பயன் தரத்தக்கதாய் உள்ளது. கலைச் சொற்களைத் 
தொகை நிலையாக (unit term ) குறைந்த எண்ணிக்கையில் எழுத்துக்களை உடையதாக உருவாக்க முடிகிறது. 

வு ஈற்று சொற்கள் உகர ஈற்றுச் சொற்களாக இருப்பதால் ஒரு பொது நெறிமுறைக்கு உட்பட்டிருக்கின்றன .'கு' ஈற்று 
வினைச் சொற்களைப் போல 'வு' இற்றுப் பெயர்ச் சொற்களெல்லாம் பெயரடையாக மாறும்போது உகரம் கெட்டு
இகரம் புகுந்து யகரம் ஒட்டுகிறது. 
ஏவு - ஏவிய , தாவு - தாவிய ,பாவு - பாவிய 
தூவு - தூவிய , கூவு - கூவிய 

இது உகர ஈற்றுச் சொற்களுக்கு மட்டுமின்றி இகர ஈற்றுச் சொற்களுக்கும் ஒரு பொதுப் பண்பாகும். ஆனால் உகர ஈற்று 
வினையடிகளின் ஈற்றெழுத்து உயிர்மெய் களுள் எவ்வினத்தைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இகர ஈற்று வினையடிகளின் ஈற்றெழுத்து மெல்லினம், இடையின வகை உயிர் மெய்யாக இருக்கும் போது மட்டுமே 
இப்பண்பு காணப்படுகிறது .
எ.கா. 
உகர ஈற்று : பேசு - பேசிய ,முந்து - முந்திய ,வறு- வறிய,எண்ணு- எண்ணிய ,
பின்னு -பின்னிய ,பெரு - பெரிய ,மேவு- மேவிய ,வலு -வலிய
இகர ஈற்று : இனி - இனிய ,உரி - உரிய ,இழி -இழிய,எளி- எளிய 

வல்லின உயிர் மெய்யானால் .த் விகுதிச் சேர்க்கை காணப்படுகிறது .

பறி- பறித்த .புசி- புசித்த ,பிடி-பிடித்த ,விதி -விதித்த 

'வு' ஈற்றுச் சொற்களின் வினையடி ஈறு மெய்யானால் 'வு' நீங்கி 'த' விகுதிச் சேர்க்கை செய்யப்பட்டு பெயரடைச் 
சொற்கள் உருவாக்கப் படுகின்றன .அப்போது 'ந்' இடைத்தோன்றும்

சோர்வு -சோர்ந்த ,ஆய்வு -ஆய்ந்த ,தேர்வு - தேர்ந்த ,தாழ்வு-தாழ்ந்த 
பாய்வு -பாய்ந்த ,வாழ்வு - வாழ்ந்த 
'வு ஈற்றுச் சொற்களின் வினையடி ஈறு இகர ,உகர ,ஐகாரங்களை ஈற்றாகக் கொண்டிருந்தால் த மற்றும் ய விகுதிச் சேர்க்கை இரண்டையும் ஏற்கிறது .ஆனால் அகர ஈறு 'த ' விகுதிச் சேர்க்கையை மட்டுமே ஏற்கிறது. இதில் 
'த' விகுதிச் சேர்க்கை பெயர் உரிச் சொற்களையும் ய விகுதிச் சேர்க்கை வினை உரிச் சொற்களையும் தருகின்றன .
உகர ஈற்று 
முடிவு - முடிந்த/முடிய 
மெலிவு - மெலிந்த/மெலிய 
மடிவு- மடிந்த/மடிய 
மலிவு- மலிந்த/மலிய 
இகர ஈற்று 
சரிவு -சரிந்த/சரிய
உரிவு -உரிந்த/உரிய 
ஒழிவு- ஒழிந்த /ஒழிய 
அழிவு - அழிந்த/அழிய 
ஐகார ஈற்று 
அலைவு -அழிந்த/அலைய 
அசைவு - அசைந்த/அசைய 
இசைவு - இசைந்த/இசைய 
இணைவு -இணைந்த/இணைய 
அகர ஈற்று 
அளவு - அளந்த 
உவவு - உவந்த 
துறவு - துறந்த 
இழவு - இழந்த.
       
   
 

No comments:

Post a Comment